எவை சிறப்பானது என்பதில்
உன் கவிதையும்
உன் புன்னகையும்
ஒருங்கே
புலப்படும் தருணத்தில்
பிரிக்க முடியாமல்
கண்ணில் ஒன்றையும்
மனதில் ஒன்றையும்
வாங்கி மகிழ்கிறேன்
இரண்டிலும்
ஆனந்தமே மிச்சமாகி
நான் அயர்ந்து சரிகிறேன்.

Comments

Popular Posts